ஞாயிறு, 31 மே, 2009

கொங்கராயகுறிச்சி- கருங்குளம் இடையே ஆற்றுப்பாலம் : எம்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயகுறிச்சி- கருங்குளம் இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தேன். தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தேன்.

இதையடுத்து பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி கொங்கராயகுறிச்சி- கருங்குளம் இடையே ஆற்றுப்பாலம் அமைக்க முதல் கட்டமாக அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர் என்றார் எஸ்.ஆர். ஜெயதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin