ஞாயிறு, 31 மே, 2009

வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு காதர் மொகைதீனை நியமிக்க கோரிக்கை

தமிழக வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகைதீனை நியமிக்க வேண்டும் என, முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் கிளையின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்.கே. முஹம்மது அலி தலைமை வகித்தார். நகர துணைச் செயலர் ஏ.எல்.எஸ். அபூசாலிஹ் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கிவைத்தார்.
நகரச் செயலர் பி.எம்.எஸ். அமானுல்லாஹ் வரவேற்றார்.

மாநிலப் பொதுச் செயலராக பொறுப்பேற்றுள்ள காயல்பட்டினம் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பேரூராட்சித் தலைவர் வி.எம்.எஸ். லெப்பை பெயரை சூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட உதவித் தலைவர் எஸ்.டி. கமால், நகர மாணவரணிச் செயலர் எம்.ஏ.சி. சுஹைல் அஹ்மத், மாவட்ட கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ் ஆகியோர் பேசினர். நகர உதவிச் செயலர் என்.டி. ஸலாஹூத்தீன் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin