திங்கள், 18 மே, 2009

தேசிய கொடி ஏற்றிக் கொண்டாட இலங்கை உத்தரவு

கொழும்பு: விடுதலைப் புலிகளை ராணுவம் தோற்கடித்து விட்டதை நாட்டு மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு அந்நாட்டு அரசு இலங்கை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வீடுகள், நிறுவனங்கள், கல்விக் கூடங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

நமது பாதுகாப்புப் படை சாதித்துள்ள மிகப் பெரிய சாதனையை இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

பீதியில் கொழும்பு தமிழர்கள்

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சுட்டு கொல்லப்பட்டிருப்பதை அடுத்து கொழும்பு உள்ளிட்ட இலங்கை யின் மற்ற பகுதியில் இருக்கும் தமிழர்கள் இடையை பெரும் பீதி பரவியுள்ளது.

ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் சிங்களவர்களின் கொடுமை இனி அதிகரிக்கும், அடிமைகள் போல வாழ வேண்டியிருக்கும் என்பதால் அங்கிருப்பவர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin