செவ்வாய், 19 மே, 2009

புதிய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்!

மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. பல புதிய மாறுதல்களுடன் இந்த நோட்டுக்கள் புழக்கத்துக்கு வரும் என இன்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

மகாத்மா காந்தியின் படங்கள் அச்சடிக்கப்பட்ட இந்த புதிய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் பல ரகசிய குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. கள்ள நோட்டுக்கள் பெருகுவதைத் தவிர்க்கவே இந்த மாறுதல்கள்.

ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழைய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களும் சட்டப்படி செல்லும் என்றும் அதுகுறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பத்து ரூபாய் நாணயங்களை இரு வாரங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி புழக்கத்துக்குக் கொண்டுவந்தது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin