ஞாயிறு, 31 மே, 2009

காயல்பட்டினம் ஹாமித்திய்யா நிறுவனத்தில் ஐம்பெரும் விழா

காயல்பட்டினம் புகாரிஷ் ஷரீபு சபையில் ஹாமிதிய்யா சன்மார்க்க கல்வி நிறுவனத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.

நபிகள் நாயகம் பிறந்த தின விழா, மகான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜூலானி உதய தின விழா, மகான் ஹாமீது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா, திருமறை குர்ஆன் மனனம் செய்துள்ள மாணவர்களுக்கு ஹாபிழ் (ஸனது) பட்டமளிப்பு விழா, மதரஸôவின் 39-வது ஆண்டு விழா என இந்த ஐம்பெரும் விழா நடைபெற்றது.

முதல் நாள் காலை முதற்கட்ட நகர்வலமும், சன்மார்க்கப் போட்டிகளும் நடைபெற்றன.

இரண்டாம் நாள் மாலை உயற்பயிற்சி மற்றும் தப்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு என்.எஸ். நூஹ் ஹமீத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளர் ஜி. பாலமுருகன் கலந்துகொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மூன்றாம் நாள் காலை இரண்டாம் கட்ட நகர் வலமும், பின்னர் குர்ஆன் மனனம் செய்த மாணவர்களுக்கு ஹாபிழ் (ஸனது) பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.

எஸ்.கே. ஷெய்கு அப்துல்லாஹ் ஜூமானி தலைமை வகித்தார். ஐ.எல். செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஸனது பற்றி விளக்கினார்.

மத்ரஸô பற்றி முதல்வர் ஐ.எல். நூல் ஹக் நுஸ்கி விரிவாக கூறினார். மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.என்.எம். முஹம்மத் இல்யாஸ் சிறப்புரையாற்றினார்.

முதன்மைப் பேராசிரியர் எஸ்.எம். அபூபக்கர் சித்திக் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு உரையாற்றினார்.

எஸ்.எம்.பி. ஹூûஸன் மக்கீ நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin