இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 83 விழுக்காடு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு இன்று காலை 9 மணிக்கு அரசு பள்ளித் தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 6,40,844 பேர்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 5,32,222 பேர்.மொத்த விழுக்காடு 83 விழுக்காடு ஆகும். இதில் மாணவர்கள் 80.3 விழுக்காடும், மாணவிகள் 85.5 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக