சனி, 28 மார்ச், 2009

என் பிரிய துபை

கணத்த மனத்துடனும்எதிர்கால கனவுடனும்என் இளமை காலஏக்கங்களுடனும் உன்னில் நான் காலடி வைத்தேன்

என் மண்ணில் கிடைக்காத அங்கிஉறாரம்இம் மண்ணில் நீ எனக்குத்தந்தாய்

தவிப்புடன் தாவியகுழந்தையாய் நான்ஆதரவுடன் அள்ளிய அன்னையாய் நீ

எத்துணை மன போரட்டம்என்னில்அத்துணைக்கும் மருந்தெடுத்துதந்தாய் உன்னில்

எத்துணை முறை என் வேதனை மனத்திற்குவெண் சாமரம் வீசியிருக்கும்உன் கடற்கரைக் காற்று

சோகமாய் வந்த என்னைஎத்துணை முறை உன் கடற்கறை மடியால்தாலாட்டி இருக்கிறாய்

நான் இந் நாட்டில் இருக்கும் போது தானேஎன் வீட்டில் இருப்பது போல்உணர்ந்தேன்

நான் எந் நாட்டில்உறங்கியதை விடஇந் நாட்டில் உறங்கிய வருசங்கள் தானே அதிகம்

எப்போதும் களிப்புடனேபார்த்த உன் முகத்தில்இன்று கலக்ககம் ஏன்அள்ளி அள்ளி கொடுத்த பூமி நீ

எத்தனை குடும்பங்ளி;ல் நீமகிழ்ச்சி விளக்கு ஏற்றி இருக்கிறாய்எத்தனை இல்லங்களில்சந்தோசச் சலங்கைஒலிக்கச் செய்தாய்

இன்று உன்னில் ஏன் இந்த நிசப்தம்

என்னை சீராட்டி , பாரட்டிமெருகூட்டியது நீஉன் ஆரவார முகத்தில்சோகத் துளிகள் ஏன்?

நிதம் ஒரு நிகழ்ச்சியால்எத்தனை சந்தோசப் பூக்களை தூவியிருக்கிறாய்உனக்கு இன்று பொருளாதார நெருக்கடியாம்

விசா இல்லாதவர்கெல்லாம்வேலை தந்த நீஇன்று விசா உள்ளவர்கேவேலையில்லை என்கிறாயாம்

அள்ளி சென்றவரெல்லாம்எள்ளி நகையாடுகிறார்காலம் விரைவில் மாறும்வசந்தம் மீண்டும் வீசும்

உன் வானில் மகிழ்ச்சிமீண்டும் சிறகடிக்கும்நீயே இன்றும் என்றும் அரபு நாடுகளின்அழகு ராணி.

நன்றி : ராஜா கமால் - rajakml@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin