வெள்ளி, 3 ஜூலை, 2009

கத்தாரில் படகு மூழ்கி 16 இந்தியர்கள் பலி

கத்தாரில் படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 இந்தியர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

தோஹாவிலிருந்து 2 கட மைல் தொலைவில் உள்ள எண்ணெய் துறப்பன கிணறு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

அங்கு ஏற்கனவே பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உதவுவதற்காக சென்ற 35 பணியாளர்களுடன் அந்த படகு கவிழ்ந்து மூழ்கியதாகவும், இதில் 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கத்தாரிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

படகில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 16 பேர் இந்தியர்கள் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் கடலோர பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin