சனி, 13 ஜூன், 2009

தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திடீர் மழை


தூத்துக்குடியில் இன்று பகல் 2மணியளவில் பலத்த இடியுடன் மழைபெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் அக்கினி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கடுமையான வெப்பத்தை சந்தித்த மக்களுக்கு இன்று பெய்த இடியுடன் கூடிய மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

இன்று நன்பகல் 2மணியளவில் திடீரென இடி இடித்து ஆழங்கட்டி மழைபோல் பெரும் தூறலாக விழுந்தது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. தூத்துக்குடியின் பிரதான சாலையான W.G.C. ரோடு, விக்டோரியா ரோடு, எட்டையபுரம் ரோடு மற்றும் சில தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இந்த திடீர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin