சனி, 30 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தக் கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் தொடக் கக்கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் வீரமுர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத் தில் தலைமை ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ், ஆண்ட்ரூ குருஸ், தேவ ராஜன், மாவட்ட செயலாளர் சம்பத் சாமுவேல், வட்டார பொருளாளர் பாப்ஹயஸ், ஆகியோர் ஆர்ப்பாட்டத் தின் நோக்கம் பற்றி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்வியை நடப்பு கல் வியாண்டில் அமல்படுத்திட வேண்டும் எனவும், தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிடவும், ஆறாவது ஊதியகுழுவின் மாற்ற குறைபாடுகளை களைந்திட வேண்டும் எனவும், ஒளிவு மறைவற்ற ஆசிரியர் கலைந்தாய்வு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் பணிக் கால அடிப்படையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin