சனி, 5 மார்ச், 2011

ஸ்ரீவை அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் மேலக்கோட்டை வாசல் தெருவில் அன்னை சத்யா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் உள்ளது.

இங்கு 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். புதன்கிழமை மதியம் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 14 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு தாமதமாக வந்ததால், இச்சம்பவத்தையடுத்து, அவர்களுக்கு மாற்று உணவு வழங்கப்பட்டது

- தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin