ஞாயிறு, 6 மார்ச், 2011

ஸ்ரீவை, திருப்புளியங்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இந் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அ.சேது தலைமை வகித்தார். துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வீரபாகு வரவேற்றார்.
எம்.பி.சுடலையாண்டி எம்.எல்.ஏ. நிழற்குடையைத் திறந்து வைத்துப் பேசினார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் காடுவெட்டி பிச்சையா, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் முத்துகுமார் நன்றி கூறினார்.

- தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin