திங்கள், 28 டிசம்பர், 2009

ஸ்ரீவை.,யில் ஓய்வூதியர்கள் குறை கேட்பு கூட்டம்

ஸ்ரீவை.,யில் ஓய்வூதியர்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களின் குறை கேட்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகளும் ஓய்வூதியர்களும் கலந்து கொண்டனர். மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட சங்க தலைவர் பிச்சையா தலைமை வகித்தார். ஆலோசகர் கோவிந்தராஜ் வரவேற்றார். சங்கத்தின் செயல்பாடுகளுக்காக கருத்து பரிமாற்றம் நடந்தது.மூன்றாம் நிகழ்ச்சியாக ஓய்வூதியர் தினக் கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆனந்தபெருமாள், ஸ்ரீனிவாசகதாத்தம், முருகேஸ்வரன், ஈஸ்வரன், நடராஜன், சரவணபவன் பிச்சையா, பாண்டிகுமார், அருணாசலம், பாண்டி பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin