திங்கள், 28 டிசம்பர், 2009

ஸ்ரீவையில் அரசு போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி.சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீவைகுண்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி.சங்கம் சார்பில் இலவச நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடந்தது.ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு நடந்த முகாமிற்கு ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சுடலையாண்டி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் வின்செண்ட், பொருளாளர் பிச்சையா, நகர காங்.,தலைவர் சேதுபாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் நல்லகண்ணு, வட்டார செயலாளர் ஜெயராஜ், நகர இளைஞர் காங்.,தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பணிமனை தொழிலாளர்கள் பொதுமக்கள் உட்பட 250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுதர்சன் ஆஸ்பத்திரி டாக்டர் ராமசாமி, தலைமை நிலைய மேலாளர் மோகன் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், 15வது வார்டு உறுப்பினர் சொர்ணலதா, நகர பொருளாளர் சந்திரன், காளியப்பன், சேதுராமலிங்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொய்யாழி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஐ.என்.டி.யு.சி.நிர்வாகிகள் செய்திருந்தனர்

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin