திங்கள், 28 டிசம்பர், 2009

ஸ்ரீவை.,யில்அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் கணபதி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வி.ஏ. ஓ., சங்க தலைவர் ரா மையா, சாலைபணியாளர் சங்க வட்டத் தலைவர் வேல்பாண்டி, அரசு ஊழியர் சங்க துணைத்தலைவர் சேதுபதி, வருவாய் துறை சங்க வட்டத் தலைவர் முத்துராமலிங்கம் உட்பட பல ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin