வியாழன், 17 டிசம்பர், 2009

ஸ்ரீவையில் ஆன்மிக நூலகம் திறப்பு விழா

ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி திருக்கோயிலில் ஆன்மிக நூலக திறப்பு விழா நடந்தது.

கோயில் வளாகத்தில் நடந்த விழாவிற்கு இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் தனபால் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் பெருமாள், நிர்வாக அதிகாரி தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகத்தை இணை ஆணையர் தனபால் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

விழாவில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், வெங்கிடாச்சாரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இசக்கியப்பன், ராஜவேல், முருகேசன், ஆறுமுகம், முத்தையா, டி.வி.எஸ்.ஆலோசகர் முருகன், சுப்பு மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin