திங்கள், 28 டிசம்பர், 2009

ஸ்ரீவை K G S கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியின் 45வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார்.

கல்லூரி துறைத்தலைவர்களான இயற்பியல் துறை பீட்டர் அருள் அல்போன்ஸ், வணிகவியல் துறை சந்திரசேகர், தாவரவியல் துறை முத்துகுமாரசாமி, வேதியல் துறை நயினார், கணிதத்துறை சுப்பையா, விலங்கியல் துறை சுப்பிரமணியன், பொருளியல் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாநில தகவல் ஆணையர் பெருமாள்சாமி சுயவேலை வாய்பின் மூலம் தேசத்தின் நிலையை உயர்த்த பாடு படவேண்டும் என பேசினார்.

விழாவில் பேராசிரியர்கள் நிசார், சேதுராமன், சூரியன், ஸ்ரீதர், முருகன், பெருமுடையான், குழந்தை பாண்டியன், பொன்னுசாமி விஸ்வநாதன், சுடலை, சுப்பிரமணியன் , சின்னதம்பி, பிரேமலதா, மாரியப்பன், குமாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். 122 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin