ஞாயிறு, 8 நவம்பர், 2009

ஸ்ரீவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுடலையாண்டி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் புதிய பாலம் கட்டும் பணி மழையினால் தடைபட்டிருப்பதை பார்வையிட்ட சுடலையாண்டி சிவராமமங்கலத்தில் வீடுகளை சூழ்ந்திருந்த மழை வெள்ளத்தை அகற்ற எம்.எல்.ஏ. அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

மேலும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கொடுத்த மனுவின் பேரில் அதை அகற்ற வட்டாட்சியரிடம் கேட்டுக்கொண்டார்.

வட்டாட்சியர் பரமசிவன், ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, கூடுதல் ஆணையாளர் வீரபாகு, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் கந்த சிவசுப்பு உள்ளிட்டோர் அவருடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin