ஞாயிறு, 8 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு சனிக்கிழமை நிலவரம்

கடந்த 3 நாள்களாக இடைவிடாமல் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நிரம்பியதால் அதிலிருந்து சனிக்கிழமை நிலவரப்படி 8400 கன அடி உபரிநீர் வெளியேறி கடலுக்கு செல்கிறது.

மருதூர் மேலக்காலில் 1100 கனஅடி தண்ணீரும், கீழக்காலில் 400 கன அடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் தென்காலில் 1100 கன அடி தண்ணீரும், வடகாலில் 978 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் 55-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin