புதன், 11 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் 2 ஏக்கர் நிலம் கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கணபதி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சேர்மசிஸ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சங்க செயலாளர் பெருமாள் சி.பி.எம். ஒன்றிய செயலாளர் கந்தசாமி நகர செயலாளர் இராமலிங்கம், சி. ஐ.டி.யு நிர்வாகி, முருகன், உலகநாதன் மாயாண்டி, சிவணைந்த பெருமாள் ஜவகர்ஷா சின்னதுரை கனியம்மாள், ஆகியோர் உ ட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு இரண்டு ஏக்கர் நிலம் உடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin