புதன், 11 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று நல்ல மழை

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 32மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 2 வீடுகள் இடிந்துள்ளது.

ஸ்ரீவை.அணை நீரை சாத்தான்குளம், உடன்குடிக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரிக்கை:-

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வீணாகக் கடலுக்குச் செல்லும் வெள்ள நீரை சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு திருப்பிவிட வேண்டும் என தென்பகுதி விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஏரல் தரைப்பாலம் மூழ்கியது:-

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக நேற்றுஏரல் தரைப்பாலம் மூழ்கியதால், அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. ஆத்தூர் தாமிரபரணி மேம்பாலத்தை தெடும் அளவிற்கு வெள்ள நீர் சென்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin