ஞாயிறு, 1 நவம்பர், 2009

ஸ்ரீவையில் ., சிவில் சப்ளை ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

ஸ்ரீவைகுண்டம் சிவில் சப்ளை ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் கணக்கில் வராத 9ஆயிரத்து 100ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் உள்ள சிவில் சப்பளை பிரிவில் லஞ்சபணம் கைமாறுவதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி லஞ்சஒழிப்பு டிஎஸ்பி ரெங்கசாமி,இன்ஸ்பெக்டர்கள் எடிசன்,ராஜ் மற்றும் தளவாய் முத்துஜான், பாண்டி, சீத்தாராமன்,வேல்குமார் தலைமையிலான போலீசார் தாலுகா ஆபிசில் செயல்பட்டு வரும் சிவில்சப்ளை பிரிவில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

இதில் மேஜைகள், குப்பைத்தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியதில் ரூ.9ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. இது கணக்கில் வராத பணம் என்று போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வட்டார வழங்கல் அலுவலர் சங்கரன்நாரயணன், ஆர்.ஐ.,க்கள் ஜெயக்குமார், சுல்தான், உதவியாளர்கள் சிவபெருமாள், முகைதீன் பிச்சை ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் 5 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிசில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin