ஞாயிறு, 1 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் ஹோட்டல்கள், டீக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தும் ஹோட்டல்கள், டீக்கடைகளில் பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

பாரத் பெட்ரோலிய மேலாளர் தனபால் உத்திரவின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ரவிந்திரா, விற்பனை மேனேஜர் சண்முகராஜ் குழுவினர் அடங்கிய அதிகாரிகள் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு முறைகேடாக உபயோகப்படுத்தும் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டது.

கடைக்காரர்கள் கமர்சியல் சிலிண்டரான 19 கிலோ எடை சிலிண்டரை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டனர். வீட்டு உபயோக மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி வியாபாரம் செய்வதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin