சனி, 31 அக்டோபர், 2009

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கார் பருவ சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைப் பகுதியில் அணைகளின் நீர் பிடிப்பு இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மழை நீடித்தால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்

நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால் ஸ்ரீவைகுண்டம் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin