வியாழன், 15 அக்டோபர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழுக் கூட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழுக் கூட்டம் எம்.சேர்மசிங் தலைமையில் நடைபெற்றது

அதில் வாழைத்தாரை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட உதவித் தலைவர் த.சீனிவாசன், சி.பி.எம். ஒன்றியச் செயலர் கி.சந்தசாமி, மூலக்கரை மாயாண்டி, இந்திராநகர் சிவனணைந்த பெருமாள், மாவட்ட உதவிச் செயலர் இசக்கியம்மாள், சந்திரன், பால்துரை, பேருராட்சி முன்னாள் தலைவர் தி.உலகம்மாள், விவசாய சங்க ஒன்றியச் செயலர் ஐ.கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு 200 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

2. வாழைத்தார் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு குளிர்சாதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin