வியாழன், 15 அக்டோபர், 2009

ஸ்ரீவை, வருவாய்க் கிராம ஊழியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தும் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு வருவாய்க் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச் சங்கத்தின் வட்டக் கிளைக் கூட்டம் ஏ.காந்தி தலைமையில் நடைபெற்றது. எஸ்.கே.ராமையா, முருகானந்தம், சுந்தரம், அப்பு, இல.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழக அரசு அலுவலக உதவியாளர்களுக்கு வழங்ங்கிய ஊதிய விகிதத்தை கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

வீட்டு வாடகைப்படி மத்திய அரசு போல வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபடும் வருவாய் கிராம ஊழியர் முதல் வட்டாட்சியர் வரையிலான அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin