வியாழன், 15 அக்டோபர், 2009

ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலர் தாற்காலிக பணிநீக்கம்

ஸ்ரீவைகுண்டத்தில் முறைகேடுகள் புகாரைத் தொடர்ந்து, கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தனி அலுவலர் செ. சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் செயலராக சு. பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் அவரை தாற்காலிக பணிநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, சங்கம் தொடர்பான எந்தவித வரவு செலவுகம் குறித்தும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு மீறி வைத்து கொண்டால் அதற்கு சங்க நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin