திங்கள், 26 அக்டோபர், 2009

ஸ்ரீவை கே.ஜி.எஸ் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவி ஆற்றிவரும் சேவையை திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எம். ராமலட்சுமி, சிறு வயது முதலே தனது பெற்றோர்கள் செலவுக்கு கொடுக்கும் பணத்தை சேமித்து, நாட்டில் ஏற்படும் வெள்ளம், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் மீட்பு நிதிக்கு அனுப்பி வருகிறார்.

அவரது இச் சேவையைப் பாராட்டி, திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர் என். சுவாமிநாதன், தனது சேமிப்பில் இருந்து மாணவிக்கு பரிசு வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் எபனேசர் ஜோசப், பேராசிரியர்கள் சந்தோஷ்குமார், முகம்மது, கந்தகுமார், ராமலட்சுமியின் தந்தை பாரதிமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin