திங்கள், 26 அக்டோபர், 2009

காயல்பட்டினத்தில் ஓய்வு பெற்ற இமாம் கெüரவிப்பு

காயல்பட்டினத்தில் ஓய்வு பெற்ற இமாம் பணமுடிப்பு வழங்கி கெüரவிக்கப்பட்டார்.

காயல்பட்டினம் செய்து ஸலாஹூத்தீன் பள்ளி என்ற மேலப் பள்ளிவாசலில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற இமாம் தாழையூத்தைச் சேர்ந்த முஹம்மத் கானுக்கு பண முடிப்பு வழங்கி கெüரவிக்கப்பட்டது.

விழாவிற்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக்கு லெப்பை தலைமை வகித்தார்.

பள்ளியின் முன்னாள் முத்தவல்லி பி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் இமாமுக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எஸ். ஸதக்கத்துல்லாஹ் வாழ்த்திப் பேசினார்.

பள்ளித் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.புஹாரி பள்ளி சார்பில் இமாமுக்கு பணமுடிப்பை வழங்கினார்.

விழாவில் நிர்வாகக் குழு உறுப்பினர் இல்யாஸ், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபைச் செயலர் பாளையம் இப்ராகிம், இலங்கை கொழும்பு அல்ஜாமி உல் அள்ஃபர் பி.எம்.ஏ.பல்லாக் லெப்பை, முஹியத்தீன் டிவி இயக்குநர் ஜே.எம்.அப்துர் ரஹீம் மற்றும் ஜமா அத்தினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin