சனி, 31 அக்டோபர், 2009

ஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகிலுள்ள தேவர் சிலைக்கு எம்.பி.சுடலையாண்டி எம்எல்ஏ, எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி., ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செல்வி அருள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்ரீவைகுண்டம் பாஜக சார்பில் தேவர் சிலைக்கு மாவட்டச் செயலர் கொற்கை மாரிமுத்து, அமைப்பு பொதுச் செயலர் ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin