சனி, 24 அக்டோபர், 2009

காயல்பட்டினத்தில் ஐக்கிய சமாதான அறக்கட்டளை அலுவலகம் திறப்பு

காயல்பட்டினத்தில் ஐக்கிய சமாதான அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்ற விழாவிற்கு அறக்கட்டளைத் தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உலமாக்கள் அணி மாநில அமைப்பாளருமான எம்.ஹாமீத் பக்ரீ ஆலிம் மன்பஈ தலைமை வகித்தார்.

தாருத்தியான் திருக்குர்ஆன் மனனப் பயிலக மாணவர் பஷீர் ஜஃப்ரான் இறைமறை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் எஸ்.எம்.முஹம்மது ஃபாரூக், ஹாமிதிய்யா பேராசிரியர் எஸ்.ஹெச்.பாஷில் அஸ்ஹப், எஸ்.கே. முஹம்மது சாலிஹ், அறக்கட்டளை தலைமை நெறியாளர் லியாகத் அலி ஆகியோர் பேசினர்.

விழாவில், ஏழை, எளியோருக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தையல் இயந்திரங்களை வழங்கினார்.

முஸ்லிம் லீக் செயலர் அமானுல்லாஹ், துணைச் செயலர் அபூசாலிஹ், திமுக நகர செயலர் மு.த.ஜெய்னுத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொருளாளர் அப்துல் ஹை வரவேற்றார். இறுதியில் துணை செயலர் ஏ.சுலைமான் சேட் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin