சனி, 24 அக்டோபர், 2009

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 312 பேர் நேரடியாக பெற்றனர்


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, பல்கலைக்கழக இணைவேந்தரும், மாநில உயர்கல்வித் துறை அமைச்சருமான க. பொன்முடி தலைமை தாங்கி 312 பேருக்கு நேரடியாக பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கிப் பேசினார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒüவை நடராஜன் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

88 பெண்களும், 107 ஆண்களும் என மொத்தம் 195 பேர் பிஎச்.டி. பட்டம் பெற்றனர். முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெறுவோராக 24 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 27 பேர் எம்.ஃபில் பட்டமும், 42 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 48 பேர் முதுகலைப் பட்டமும், 41 பெண்கள், 1 ஆண் என மொத்தம் 42 பேர் இளங்கலைப் பட்டமும் பெற்றனர். பதக்கம் பெற்ற 117 பேரில், 107 பேர் பெண்கள். 10 பேர் மட்டுமே ஆண்கள்.

இவர்கள் தவிர, தபால் மூலம் பட்டம் பெறுவோரில் 528 பேர் எம்.ஃபில் பட்டமும், 4,346 பேர் முதுகலைப் பட்டமும், 14,550 பேர் இளங்கலைப் பட்டமும் என மொத்தம் 19,424 பேர் பட்டம் பெறுகின்றனர்.

இந்த ஆண்டு நேரடியாகவும், தபால் மூலமும் மொத்தம் 19,736 பேர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில், தொலைநெறி தொடர்கல்வி மூலம் பயின்று பட்டம் பெறுவோரும் அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin