வியாழன், 15 அக்டோபர், 2009

இன்று முதல் ஏ.டி.எம்.-களில் பணம் எடுக்க கட்டுப்பாடு


இன்று முதல் ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே வேறு வங்கி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியும் என்றும் அதற்கு மேல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு தடவைக்கும் சேவை வரி விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், அக்டோபர் 15ஆம் தேதி முதல், ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே வேறு வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு தடவைக்கும் சேவை வரி விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி ஒரு தடவைக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல், மற்ற வங்கி ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க முடியாது. அதேநேரத்தில், வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin