வியாழன், 29 அக்டோபர், 2009

நெல்லையில் பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்: மாணவிகள் உட்பட 3பேர் பலி


திருநெல்வேலியில் இன்று காலை பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 11ம் வகுப்பு மாணவி, பேருந்தின் டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

திருநெல்வேலி, பாளையில் லட்சுமிராமன் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இன்று காலையில் பள்ளியிலிருந்து புறப்பட்ட பள்ளி பேருந்து திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. கே.டி.சி. நகர் அருகே, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில் அப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் கற்பக வள்ளி என்ற மாணவி,இந்துஜா(16)என்ற பிளஸ் 1 மாணவியும், பேருந்தின் டிரைவர் மாரியப்பன் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

மதிமுக, த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்துவந்து ரத்ததானம் வழங்கி உதவினர். பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் : செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin