புதன், 16 செப்டம்பர், 2009

சிலம்பப் போட்டியில் நெல்லையைச் சேர்ந்தோர் சிறப்பிடம்

பாளை.யில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்தோர் அதிக வெற்றி பெற்றனர்.

பாளை. அண்ணா விளையாட்டு அரங்கில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இப் போட்டி 13-ம் தேதி தொடங்கியது.

200 ஆண்களும், 80 பெண்களும் கலந்துகொண்ட இப் போட்டி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. வென்றோர் விவரம்:

ஆண்கள் பிரிவு (40 கிலோ):

1. விக்கிரமசிங்கபுரம் எஸ். செய்யது ரியாஸ்கான், 2. மேலப்பாளையம் ஏ. ஷேக், 3. அப்புவிளை வி. சுரேஷ்.

பெண்கள் பிரிவு:

1. திருநெல்வேலி நகரம் எஸ். சுந்தரி, 2. சி. ராஜசங்கரி, 3. சங்கர்நகர் என். மகாலட்சுமி.

ஆண்கள் பிரிவு (50 கிலோ):

1. கரையிருப்பு ஆதிமூலப்பெருமாள், 2. திருநெல்வேலி நகரம் எஸ். தாஸ், 3. பாவூர்சத்திரம் எம். லட்சுமணன்.

பெண்கள் பிரிவு:

1. அழகனேரி எஸ். ராமலட்சுமி, 2. மேலபாலாமடை சி. சலீமா, 3. ராஜவல்லிபுரம் எம். சித்ரா.

ஆண்கள் பிரிவு (55 கிலோ):

1. பாவூர்சத்திரம் சுடலை, 2. கடையம் என். யோகராஜ், 3. ஜெ. திலகர்.

பெண்கள் பிரிவு:

1. சிதம்பரம்நகர் ஏ. லூசியா, 2. ராஜவல்லிபுரம் ஜெ. அலிஸி, 3. சங்கர்நகர் என். சூடாமணி.

பரிசளிப்பு விழா: வென்றோருக்குப் பரிசளிப்பு விழா கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் மு. ஜெயராமன் தலைமை வகித்து, வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதிசற்குணம், மாவட்ட சிலம்பக் கழகத் தலைவர் ஏ. சுந்தர், செயலர் எம். முகம்மது முஸ்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

1 கருத்து:

  1. சிங்கை ஷாகுல் அவர்களே மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் நம்ம முனவர் எப்படி ? நல்ல கட் அண்ட் பேஸ்ட் தலைவா

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin