புதன், 2 செப்டம்பர், 2009

நோன்பை முறிக்கும் செயல்கள்

ஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை.

அவற்றை சரியாக உணர்ந்து நோன்பை நல்ல முறையில் நோற்க வேண்டியது கடமையாகிறது.

webdunia photoWDஅதாவது, புகைப் பிடிப்பது. புகைப்பிடிப்பது உடலுக்கு பயன்தராது என்றாலும் அவற்றால் நோன்பு முறிந்துவிடும்.

முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றை ஒருவ‌ர் காம நோ‌க்க‌த்துட‌ன் செய்வாரேயானால் அவர்களது நோன்பு முறிந்துவிடும். ஆனால், தூக்கத்தில் ஒருவரது இந்திரியம் தானாகவே வெளியேறினால் நோன்பு முறியாது.

உணவைப் போன்று உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளையோ, குளுக்கோஸ் போன்றவற்றையோ உடலுக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வெளியேறினால் நோன்பு முறிந்துவிடும்.

வேண்டுமென்றே வாந்தி எடுப்பதால் நோன்பு முறிந்து விடும். அதே சமயம், தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

இதுபோன்று நோன்பை முறிக்கும் செயல்கள் ஏற்பட்டுவிட்டால், உடனடியாக நோன்பை முடித்துக் கொண்டு பின்னர் இந்த நோன்பை தொடர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin