புதன், 2 செப்டம்பர், 2009

ஈமான், இஸ்திஸாப் என்பதன் கருத்து

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாத்தின் நோக்கத்தை இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.

"ஒருவன் ஈமானுடன் (இறை நம்பிக்கை), இஹ்திஸாபுடனும் (சீர்தூக்கிப் பார்த்தல்) ரமலானில் நோன்பு வைத்தால், அவன் முன்பு செய்த குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்" என்கிறார்.

webdunia photoWDஈமான் என்றால், இறைவன் குறித்து ஒரு இஸ்லாமியர் எந்தக் கொள்கையைக் கடைபிடித்தல் அவசியமோ அது அவன் உள்ளம் முழுவதும் பசுமையாக படர்ந்து இருக்க வேண்டும்.

இஸ்திஸாப் என்பது, மனிதன் தனது நோன்பு காலத்தில் தனது எண்ணங்களும், செயல்களும், இறைவனை நோக்கியதாகவும், இறைவனின் திருப்தியையும், உவப்பையும் பெறும் நோக்கில் இருக்கின்றனவா என்பதை சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் தனது நோன்பு காலத்தில் இந்த இரு பண்புகளை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்ட என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin