சனி, 5 செப்டம்பர், 2009

எய்ட்ஸ் விழிப்புணர்வு திரைப்படம் திரையிடல்

திருநெல்வேலியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வு திரைப்பட திரையிடல் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பார்வதி திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. சசிகலா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். "உயிரின் உயிரே' என்ற இந்த திரைப்படம் பார்வதி திரையரங்கில் திரையிடப்பட்டது.

தொடர்ந்து பள்ளிகளுக்கு அருகில் உள்ள சில திரையரங்குகளில் திரையிடுவதற்கான ஏற்பாடுகளை மதுரையைச் சேர்ந்த ஒளி - ஒலி கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் கே. இளங்கோவன், வி.டி. சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.

பி.ஆர்.ஓ. ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin