சனி, 19 செப்டம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் பஸ் மறியல்: போலீஸ் தடியடி

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கால்வாய்க்கு இரவில் செல்லும் பஸ் இயக்கப்படாததால், பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தினமும் இரவு 9 மணிக்கு கால்வாய் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் வெள்ளிக்கிழமை இரவு கால்வாய்க்கு செல்லாமல் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்ஸôக இயக்கப்பட்டது. இதனால், இரவில் கால்வாய் கிராமத்திற்கு செல்லும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள், ஸ்ரீவைகுண்டம் நான்குமுக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்த காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனால், கூட்டத்தினர் கலைந்து ஓடினர். பின்னர் கிராம மக்களிடம் காவல்துறையினரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சு நடத்தினர்.

இதில், உடன்பாடு எட்டப்பட்டு கால்வாய் கிராமத்திற்கு உடனடியாக பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ்ஸில், பயணிகள் வீடுகளுக்குத் திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin