வியாழன், 10 செப்டம்பர், 2009

துபையில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் மூலம் பாகிஸ்தானுக்கு அணுசக்திக்கான சாதனங்கள்: விஞ்ஞானி கான் தகவல்

வாஷிங்டன், செப். 9: அணுசக்தி உற்பத்திக்கு தேவையான பொருள்கள், கருவிகள் துபையில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைத்தது என்று தெரிவித்தார் பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானி ஏ.கியு.கான்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கான் கூறியதாவது:

இந்த பொருள்களை பாகிஸ்தானுக்கும் மட்டுமல்லாமல் ஈரான், லிபியா ஆகிய நாடுகளுக்கும் இந்த முஸ்லிம்கள் விற்கின்றனர். அணுசக்தி தொடர்பான பொருள்கள் ஐரோப்பாவிலிருந்து கிடைக்காமல் போனதும் அவர்களுடன் நாங்கள் தொடர்பு வைத்தோம் என்றார்.

ஈரானிடம் அணு ஆயுத தொழில்நுட்பம் இருப்பதாக வெளியாகும் செய்திகள் பற்றி கேட்டதற்கு அவர்களுக்கும் நாங்கள் தான் துபையில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் பற்றி தெரிவித்தோம் என்றார்.

இதையடுத்தே அணு சக்தி தொடர்பான தேவைகளுக்கு அவர்களை ஈரானிய அதிகாரிகள் தொடர்பு கொண்டனர் என்றார் கான்.

முஸ்லிம் நாடுகளில் மிக முக்கியமானது ஈரான் என்பதால் அதனிடம் அணு ஆயுத தொழில்நுட்பம் இருப்பது அவசியம் என்பதில் எங்களுக்கும் உடன்பாடுதான். ஈரானிடம் அணு ஆயுதத் தொழில்நுட்பம் இருந்தால் இந்த பிராந்தியத்தில் பலம் கொண்டதாக அது மாறி சர்வதேச நெருக்குதல்களை சமாளிக்க முடியும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.

ஆனால், வடகொரியாவிடம் இருந்து ஏவுகணைத் தொழில் நுட்பத்தைப் பெற்றுக்கொண்டு அந்நாட்டுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் விற்றதாக கூறுவதெல்லாம் பொய் என்றார்.

நீங்கள் அந்த நாட்டுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக புகார் உள்ளதே என்று கேட்டதற்கு அதுபற்றி கருத்து ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. எனினும் வட கொரியாவுக்கு 1994லும் 1999லும் பயணம் செய்தது உண்மை என்றார்.

1999ல் அந்த நாட்டுக்குச் சென்றது 200 ஏவுகணைகளை வாங்குவதற்காகத்தான். அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்த சமயம் என்றார் கான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin