திங்கள், 21 செப்டம்பர், 2009

ஹஜ் பயணிகளுக்கு நாளை மறுநாள் தடுப்பூசி முகாம்

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாளையங்கோட்டையில் செப். 23-ல் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, பாளையங்கோட்டை மேட்டுத் திடலில் உள்ள காதிரி நகர் முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் இம் மாதம் 23-ம் தேதி காலை 10 மணிக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் எம். ஜமால் முகம்மது, செயலர் எம். ஷாகுல் அமீது மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin