திங்கள், 21 செப்டம்பர், 2009

செப். 25-ல் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி

திருநெல்வேலியில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வே.ப. சுஜயசேகரன் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தனியார் நிறுவனங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு இணங்க தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வேலை அளிப்போரும், வேலை வேண்டுவோரும் நேருக்கு நேர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதனடிப்படையில் இம்மாதம் 25ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து வரும் 24ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin