திங்கள், 21 செப்டம்பர், 2009

காயல்பட்டினம் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வாவு எஸ். காதர் தலைமை வகித்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜெஸிமா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

முடிவில் உதவித் தலைமை ஆசிரியை ஏ. நீர்ஜஹான் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin