வெள்ளி, 11 செப்டம்பர், 2009

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் 8 ஆவது நினைவு தினம்


அமெரிக்காவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தினம் 11-9-2001.அன்றையதினம்தான் நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது அல் - காய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி வெடிக்கச் செய்து தகர்த்தனர்.

பாஸ்டன், வாஷிங்டன் உள்ளிட நகரங்களிலிருந்து வெளியூர் செல்ல புறப்பட்ட 4 விமானங்களை கடத்திச் சென்று அல் - காய்தா தீவிரவாதிகள் இந்த கோர தாக்குதலை நிகழ்த்தினார்கள்.

4 விமானங்களில் இருந்த பயணிகள் அனைவரும் பலியானார்கள்.இரட்டை கோபுரத்தில் விமானங்கள் மோதிய போது இருகட்டடங்களிலும் 17,400 பேர் இருந்தனர்.விமானம் மோதியதும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தீப்பிடித்து கொண்டது.சிறிது நேரம் கழித்து இருகட்டடங்களும் இடிந்து தரைமட்டமானது.இவற்றில் சிக்கி 2,604 பேர் பலியானார்கள்.


பெண்டகனில் விமானம் மோதியதில் 125 ராணுவ வீரர்கள், ஊழியர்கள் பலியானார்கள்.4 விமானங்களில் மொத்தம் 246 பயணிகள் இருந்தனர்.அவர்களும் ஒட்டு மொத்தமாக பலியானார்கள்.

மொத்தம் இந்ததாக்குதல்களில் 3017 பேர் பலியானார்கள்.6291 பேர் காயம் அடைந்தனர்.தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்று அல் - காய்தா பின்னர் பொறுப்பேற்றுக்கொண்டது.மொத்தம் 19 தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இந்த கொடூரத்தை அரங்கேற்றினர்.

அல் - காய்தா தலைவன் பின்லேடனின் உத்தரவின் பேரிலேயே இந்த 19 பேரும் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தனர்.

இவர்களில் சிலர் விமான பயிற்சி பெற்று இருந்தனர்.4 விமானங்களிலும் டிக்கெட் எடுத்து பயணிபோல ஏறிய அவர்கள் விமானம் நடுவானில் பறந்த போது கத்தி முனையில் விமான ஊழியர்களையும், பைலட்டையும் மிரட்டி விமானத்தை கடத்தினார்கள்.பைலட்டை இருக்கையில் இருந்து அகற்றி தீவிரவாதிகளே விமானத்தை ஓட்டிச் சென்று கட்டடங்களில் மோதச் செய்தனர்

இந்த தாக்குதலைத் தொடர்ந்தே ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து தாலிபான்களுக்கு எதிராக மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து 8-ஆவது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிற நிலையில், அல் - காய்தா படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிற நிலையில், பின்லேடனும் உயிருடன் இல்லை என்றே கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin