திங்கள், 17 ஆகஸ்ட், 2009

காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

தூத்துக்குடி சுப்பையா வித்யாலய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி எச்.எஸ்.ஏ.சி. அஹ்மத் பாத்திமா நுûஸஃபா 2-ம் இடமும், ஆங்கில கட்டுரைப் போட்டியில் அதே வகுப்பைச் சேர்ந்த ராஜலட்சுமி மூன்றாமிடமும், மேஸ்ட்ரோ மெலடி போட்டியில் அதே வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ். ஆயிஷா நஸ்ரீன் மூன்றாமிடத்தையும், மெஹந்தி போட்டியில் எம்.ஏ. ஜொஹரா வாஸிஆ மற்றும் ஆர்.முத்துலட்சுமி ஆகியோர் முதலிடத்தையும், ஓவியப் போட்டியில் எஸ்.ஜே.ஜூலியட் மேரி (10-ம் வகுப்பு) 2-ம் இடத்தையும், காய்கறியில் உருவம் செதுக்குதல் போட்டியில் யுஇசட்.கே. மாயம் 2-ம் இடத்தையும், மாறுவேடப் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி அனிஷா வரிஜீன் மேரி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

மாணவ, மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியை மீனா சேகர் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin