வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் குழந்தைகளுக்கான ஒவியப் போட்டி


நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில், குழந்தை கடத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியில், சுமார் 100 பள்ளிக் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் பல வண்ணங்களில் ஓவியங்களைத் தீட்டி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஓவியம் தீட்டிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நெல்லை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ராகர்க் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளின் கைவண்ணத்தை பார்வையிட்டார். போட்டி ஏற்பாடுகளை பரமசிவம், இராமலிங்கம், சேவியர், திருமலைக்குமார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin