புதன், 26 ஆகஸ்ட், 2009

சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: ஆக. 29, 30-ல் நேர்முகத் தேர்வு

சவுதி அரேபியாவில் பணியாற்ற விரும்பும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாகர்கோவிலில் இம் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். வளைகுடா நாடுகளில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று ஐ.டி.ஐ. பயின்ற எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற ஐ.டி.ஐ. தகுதி அல்லாத ஸ்பிரே பெயிண்டர்கள், டைல்ஸ் பொருத்துபவர்கள், மேசன்கள், சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள் மற்றும் பினிசிங் கார்பெண்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.

எனவே, தகுதி உள்ளவர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் நாகர்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இம் மாதம் 29, 30-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93818 00181, 94446 90026, 044-24464269 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin