புதன், 29 ஜூலை, 2009

ஸ்ரீவை வேட்பாளரை மாற்றக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று காங்கிரஸôர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுடலையாண்டியை மாற்றக் கோரி செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி கட்சிக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அறிமுகம் இல்லாதவர் என்றும், இவரை வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்திருப்பது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று, ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று இரவு காங்கிரஸôர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் நல்லகண்ணு, நகரப் பொருளாளர் சந்திரன், நகர முன்னாள் தலைவர் புஹாரி, நகரத் தலைவர் சேதுபாண்டி, இளைஞர் காங்கிரஸ் நகரத் தலைவர் வெங்கடேஷ், வட்டார துணைத் தலைவர் மகராஜன், மாவட்டச் செயலர் ஆறுமுகம், காசி, வட்டாரத் தலைவர்கள் ஜெயராஜ், ஆறுமுகம், வட்டாரச் செயலர்கள் சீனிராஜேந்திரன், ராமச்சந்திரன், பேச்சி, பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin