வியாழன், 30 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங். வேட்பாளர் மனுத் தாக்கல்


ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும் செய்தியாளர்களிடம் எம்.பி. சுடலையாண்டி பேசியதாவது:

இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாக பாடுபடுவேன். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முயற்சி எடுப்பேன்.

இந்த தொகுதியை தமிழகத்தின் முதல் தொகுதியாக்குவேன்.

தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்.

25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin