வியாழன், 30 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து கணக்கு

ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 22 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் பிரதானமாக போட்டியிடும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., பா.ஜனதா கட்சி வேட்பாளர்களின் விவரம் வருமாறு:-

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.59 கோடியே 87 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொக்க கையிருப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம், வங்கி கையிருப்பு ரூ.2091, சேமிப்பு பத்திரம் ரூ.10 ஆயிரம், நகைகள் 200 கிராம் (ரூ.2 லட்சம்).

தூத்துக்குடி அடுத்த சங்கரப்பேரியில் நிலம் ரூ.10 லட்சம், தூத்துக்குடியில் கட்டிடங்கள் ரூ.25 லட்சம், பார்த்தசாரதி தெருவில் மனைவி மற்றும் அவரது பெயரில் கூட்டாக உள்ள கட்டிடம் ரூ.20 லட்சம், வீட்டு உபயோகப்பொருட்கள் ரூ.1 லட்சம்.

மொத்தத்தில் அவரது பெயரில் ரூ.59 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவி வேலம்மாள் என்ற வேணி பெயரில் ரொக்க கையிருப்பு ரூ.1 1/2 லட்சம், வங்கி இருப்பு ரூ.1252, சேமிப்பு பத்திரம் ரூ.25 ஆயிரம், நகை 400 கிராம் (ரூ.4 லட்சம்), வீட்டு உபயோகப்பொருட்கள் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 6,76,252 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தனலட்சுமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.

10-ம் வகுப்பு வரை தனலட்சுமி படித்துள்ளார். இவரது கணவர் ஞானசேகர், மில் தொழிலாளி. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக உள்ளார்.

தூத்துக்குடி பூபால் ராயபுரத்தில் வசிக்கும் இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தனலட்சுமியின் பெயரில் ரொக்கப்பணம் ரூ.3 ஆயிரம், வங்கியில் கையிருப்பு ரூ.1056, சேமிப்பு பத்திரம் ரூ.42,500, நகை 76.5 பவுன் (ரூ.7 லட்சம்), 3வீடுகள் ரூ.11 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சத்து 46 ஆயிரத்து 556 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

அவரது கணவர் ஞானசேகர் பெயரில் ரொக்க கையிருப்பு ரூ.5 ஆயிரம், வங்கி கையிருப்பு ரூ.2374, சேமிப்பு பத்திரம் ரூ.5 ஆயிரம் என 12 ஆயிரத்து 374 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இவை அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திர பாண்டியன். இவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.8 கோடியே 88 லட்சத்து 42 ஆயிரத்து 385 மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ஒரு கார் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொக்கம் ரூ.15 லட்சம், வங்கியிருப்பு ரூ.10 ஆயிரம், மெர்க்கண்டைல் வங்கி பங்கு பத்திரங்கள் ரூ.13 லட்சம், எல்.ஐ.சி சேமிப்பு பத்திரம் ரூ.5 லட்சம், 160 கிராம் தங்க நகை (ரூ.2 லட்சம்) உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இது தவிர நிலங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஒரு கார் உள்ளிட்ட விபரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜனதா வேட்பாளர் சந்தனகுமார் (வயது 41). இவர் தனது பிரமாண பத்திரத்தில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம், வங்கியிருப்பு ரூ.4816, சேமிப்பு பத்திரம் ரூ.1 லட்சம், நகை 8 கிராம் (ரூ.7 ஆயிரம்). அவரது மனைவி சொர்ண சுகந்தி பெயரில் வங்கியிருப்பு ரூ.70 ஆயிரத்து 800, பத்திரங்கள் ரூ.67 ஆயிரம், சேமிப்பு பத்திரம் ரூ.1 1/2 லட்சம், நகை 60 கிராம் (ரூ.1.40 லட்சம்).

தூத்துக்குடி அடுத்த மீளவிட்டானில் நிலம் உள்ளிட்ட ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 800 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. சந்தனகுமார், சொர்ண சுகந்தி பெயரில் தலா ஒரு இரு சக்கர வாகனம் உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பொதுசெயலாளரான சந்தனகுமாரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம், தற்போது தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் வசித்து வருகிறார். வக்கீலான இவருக்கு ஒரு மகன் உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin